Skip to main content

அப்படித்தானோ?


இன்று வழக்கம் போல சமயபுரம் தோல் ப்ளாசாவில் இறங்கி பள்ளிக்கு நடந்து கொண்டிருக்கிறேன்.

ஒரு பத்து அல்லது இருபது தப்படிதான் போயிருப்பேன். மின்னலென ஒரு பெண் மொபெடில் என்னை முந்திச் சென்று மறித்து நின்றாள்.

ஆறேழு ஆண்டுகளுக்கு முன்னால் என்னிடம் பன்னிரண்டாம் வகுப்பு படித்தக் குழந்தை.

“ஏய் வாய், எப்படி இருக்க?”

“ நல்லா இருக்கேன் சார். ஆமா ஏன் சார் இப்படி எளச்சுப் போனீங்க”

“வயசாகுதுல்லடா. 50 ஆச்சு. இனி அப்படித்தான்”

“ லூசா சார் நீங்க. ”

(மிரண்டுடாதீங்க. கீர்த்தி மட்டுமல்ல, இவள் மட்டுமல்ல,இப்போது என்னிடம் படித்துக் கொண்டிருக்கும் குழந்தைகளும் இப்படித்தான் பேசுவார்கள்)

“ நானாடி லூசு?”

 “பின்ன. அப்பாவுக்கு 55 ஆகுது. எனக்கென்ன வயசா ஆச்சுன்னு டை அடிச்சு எவ்வளவு ஸ்மார்ட்டா இருக்கார் தெரியுமா?”

” போதுண்டி கிழவி”

“சரி, சரி, வண்டியில ஏறுங்க கொண்டு போய் விடுறேன்”

“பக்கம்தானே போயிடறேண்டா. சிரமம் வேண்டாம்”

 சிரமம் எல்லாம் இல்ல. போற வழிதான் .”

“வேணாண்டா...”

“ தள்ளியெல்லாம் விட்டுட மாட்டேன். பயப்படாம ஏறுங்க.”

மறுத்தேன்.

“ இப்ப எங்க அண்ணன் வந்திருந்தான்னா அவனோட போயிருப்பீங்கள்ள?”

“இல்லடா”

“ஒரு பொம்பளப் புள்ள வண்டி பின்னாடி உட்கார்ந்து வரதான்னு ஈகோ உங்களுக்கு”

”அதில்லடா”

”அதுதான்”

இதற்குமேல் பேசினால், ஒன்று அடித்து விடுவாள் அல்லது அழுது விடுவாள். பேசாமல் ஏறி அமர்ந்தேன்.

“சொன்னாள்,

“அது ! ”

Comments

Popular posts from this blog

எனது ராஜா செத்ததால்

சதுரங்கம் ஆட அமர்கிறோம் நீ வெள்ளை காய்களையும்  நான் கருப்பு காய்களையும் அடுக்கிக் கொண்டிருக்கிறோம் உனக்கு வலப்பக்க குதிரையை சிப்பாயைத் தாண்டி  இடப்பக்க கட்டத்திற்கு நகர்த்துகிறாய் எனக்கு இடப்பக்கத்திலிருந்து இரண்டாவது சிப்பாயை இரண்டு கட்டத்திற்கு முன்னகர்த்துகிறேன் சம்பந்தமே இல்லாமல் பிடிச்சப்பிடி குட்டிப் பாம்புகளை சதுரங்க பலகையில் தூவுகிறாய் விரைந்து நெளிந்து முன்னேறிய  இரண்டு பாம்புகளில் ஒன்று ராணியைக் கடிக்க மற்றொன்று ராஜாவைக் கடிக்க எனது ராஜாவும் ராணியும்  மடிந்து சாய்கிறார்கள் எனது ராஜா செத்ததால் நீ வென்றதாக கோப்பையைக் கேட்கிறாய் சதுரங்க சட்டத்திற்கு இது புறம்பானதென்கிறேன் எத்தனை காலத்திற்கு சட்டத்தை ஏற்று விளையாடுவது சனாதனத்தோடுதான் விளையாடுவேனென்கிறாய்

வறண்ட குளத்திலும் கவிதை எடுக்கும் வைகறை

“ நிலாவை உடைத்த கல்” கவிதை நூலை முன் வைத்து... கடந்த ஒரு வார காலமாக எதற்குமே ஒத்துழைக்க மறுக்கிறது உடல். “பயணம் தவிர். ஓய்வெடு,”  என்கிறார் மருத்துவர். “எனக்கப்புறமும் நாலு வருஷ சர்வீஸ் இருக்கு. இப்படி இருந்தா எப்படி? ஓய்வெடுத்து உடம்பைக் கவனி,” என்று உதைக்காத குறையாக கடிந்து கொள்கிறார் தலைமை ஆசிரியர். வேறு வழியில்லை. கட்டிலில் தலையணையை சுவரோரமாய் சாய்த்துப் போட்டு சாய்ந்து அமர்ந்தபடி வாசிப்பிற்காக வரிசைகட்டி நிற்கும் நூல்களை வாசித்துக் கொண்டிருக்கிறேன். தோழர் மோகனா அவர்கள் இரு சுமை நூல்களை கருணையோடு புத்தாண்டிற்கு பரிசளித்திருக்கிறார்கள். அந்தக் குவியலிலிருந்து தோழன் யூமா வாசுகி மிக அருமையாக மொழிபெயர்த்துள்ள “கருப்பழகன்” என்ற நாவலின் 29 வது அத்தியாயத்திற்குள் பயணித்துக் கொண்டிருக்கும்போதுதான் மேல்வீட்டு பாட்டி இன்றைய தபால்களைக் கொண்டு வந்து கொடுத்தார்கள். இரண்டு நூல்கள், மூன்று சிற்றிதழ்கள், கொஞ்சம் தபால்கள். அந்த இரண்டு நூல்களுள் ஒன்று தம்பி வைகறை அனுப்பியிருந்த அவரது “ நிலாவை உடைத்த கல்” என்னமோ தெரியவில்லை, யூமாவின் நூலை ஓரம் மடக்கி வைத்...