இன்று வழக்கம் போல சமயபுரம் தோல் ப்ளாசாவில் இறங்கி பள்ளிக்கு நடந்து கொண்டிருக்கிறேன். ஒரு பத்து அல்லது இருபது தப்படிதான் போயிருப்பேன். மின்னலென ஒரு பெண் மொபெடில் என்னை முந்திச் சென்று மறித்து நின்றாள். ஆறேழு ஆண்டுகளுக்கு முன்னால் என்னிடம் பன்னிரண்டாம் வகுப்பு படித்தக் குழந்தை. “ஏய் வாய், எப்படி இருக்க?” “ நல்லா இருக்கேன் சார். ஆமா ஏன் சார் இப்படி எளச்சுப் போனீங்க” “வயசாகுதுல்லடா. 50 ஆச்சு. இனி அப்படித்தான்” “ லூசா சார் நீங்க. ” (மிரண்டுடாதீங்க. கீர்த்தி மட்டுமல்ல, இவள் மட்டுமல்ல,இப்போது என்னிடம் படித்துக் கொண்டிருக்கும் குழந்தைகளும் இப்படித்தான் பேசுவார்கள்) “ நானாடி லூசு?” “பின்ன. அப்பாவுக்கு 55 ஆகுது. எனக்கென்ன வயசா ஆச்சுன்னு டை அடிச்சு எவ்வளவு ஸ்மார்ட்டா இருக்கார் தெரியுமா?” ” போதுண்டி கிழவி” “சரி, சரி, வண்டியில ஏறுங்க கொண்டு போய் விடுறேன்” “பக்கம்தானே போயிடறேண்டா. சிரமம் வேண்டாம்” சிரமம் எல்லாம் இல்ல. போற வழிதான் .” “வேணாண்டா...” “ தள்ளியெல்லாம் விட்டுட மாட்டேன். பயப்படாம ஏறுங்க.” மறுத்தேன். “ இப்ப எங்க அண்ணன் வந்திருந்தான்னா அவன...